மௌனமாய் அமர்ந்தபோதும்
மனதில் சலனங்கள்
செய்வதறியாது பாரதியை
நாடினேன்
அவன் எழுத்துக்களில்
என்னை தொலைத்தேன்
படிக்க படிக்க மனமிறுகிப்
போனேன் -
அவனைக் கொண்டாட
மறந்தாரே என்று.
அவன் வாழ்ந்த நிலை
வேறு
அவன் உடல் மண்ணில்
வீழ்ந்த பின்னே உயர்ந்த நிலை
வேறு !
யாரும் சொல்லஅஞ்சுவதை
சொல்ல முடியா நிலையிலே
திடமாய்
கூறிய கவியவன்
சுதந்திரம்
பெற எழுதுகோலிலே
வாளை ஏந்திய மாவீரனவன்
புதியதோர்
உலகம் படைத்திட
கனவுக்கண்ட
கோமகனவன்
உண்ண உணவின்றி வாடியபோதும்
நல்ல விதை விதைத்திட்ட உழவன்
அவன்
பெண்ணியம்
பேசிய தகப்பன் அவன்
காதலால்
ஆதலால் கசிந்தவன் அவன்
பக்தியில்
மூழ்கிய முனிவன் அவன்
என்ன தவம் செய்தேனோ
பாரதி நின்னை நான் படிக்க
!